திருக்குறள்

1176.

ஓஒ இனிதே எமக்கிந் நோய் செய்தகண் தாஅம் இதற்பட் டது.

திருக்குறள் 1176

ஓஒ இனிதே எமக்கிந் நோய் செய்தகண் தாஅம் இதற்பட் டது.

பொருள்:

ஓ! என் காதல் நோய்க்குக் காரணமான கண்கள், என்னைப் போலவே வாடி வருந்துகின்றன. இது எனக்கு மகிழ்ச்சியே!.

மு.வரததாசனார் உரை:

எமக்கு இந்தக் காமநோயைஉண்டாக்கிய கண்கள், தாமும் இத்தகைய துன்பத்தைப்பட்டு வருந்துவது மிகவும் நல்லதே!.

சாலமன் பாப்பையா உரை:

எனக்கு இந்தக் காதல் துன்பத்தைத் தந்த கண்கள் தாமும் தூங்காமல் அழுவது நன்றாகத்தான் இருக்கிறது.